ஒவ்வொரு வருடமும் இலங்கையில் நிகழும் மரணங்களில் சுமார் 6 சதவீதமானவை ஆஸ்துமா நோயினால் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 05ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சுமன ஹந்தகல கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“உலகில் சுமார் 260 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் இலங்கையில் ஒவ்வொரு வருடமும் நிகழும் மரணங்களில் சுமார் 6 சதவீதமானவை ஆஸ்துமா நோயினால் ஏற்படுகின்றது.
குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே இந் நோய் அதிகமாக காணப்படுகின்றது.
ஆனால், முறையான சிகிச்சையை பெற்றுக்கொள்வதன் மூலம் இந்த நோயை குணமாக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.








