Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கடும் எச்சரிக்கை

அம்பாறையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கடும் எச்சரிக்கை

2 weeks ago
in அரசியல், செய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரச நிர்வாகத்தில் நிலவும் முறைகேடுகள், லஞ்சம் மற்றும் காணி ஆக்கிரமிப்பு விவகாரங்கள் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“காசு உள்ளவர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டமா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு இனி இடமில்லை எனத் தெளிவாக தெரிவித்துள்ளார்.

கடலரிப்பு தொடர்பாகவும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அட்டாளச்சேனை முதல் கல்முனை வரையிலான 16 கி.மீ கரையோரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குக் காரணமாக 2010 காலத்தில் அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதை தொடர்பாக ஒரு வாரத்திற்குள் அறிவியல் அடிப்படையிலான ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பொத்துவில் பகுதியில் பொதுப் பூங்கா மற்றும் களப்பு நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் முன்னாள் அரசியல்வாதிகள் தொடர்புடையவர்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை சொந்தச் செலவில் மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆறுகம்பே சுற்றுலா வலயத்தில் உள்ள பல ஹோட்டல்கள் அரச அனுமதி இல்லாமல் அல்லது குறைந்த கட்டணத்தில் (permit lands) செயல்படுவதாகவும், இதனால் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மூன்று முக்கிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

1.காணி ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற விசேட அதிகாரக் குழு அமைக்கப்படும்
2.சட்டவிரோத மணல்/மண் நிரப்புதலைத் தடுப்பதற்காக விசேட அதிரடிப்படை (STF) ஈடுபடுத்தப்படும்
3.கரையோர பாதுகாப்பும் சுற்றுலா மேலாண்மையும் ஒருங்கிணைக்கும் புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும்

“கிழக்கின் கரையோரப் பகுதியை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியத்தால் அழிக்க விடமாட்டோம்” என ஜனாதிபதி இறுதியில் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் ரேடார் அமைக்க கோரிக்கை; வெளியாகியுள்ள எதிர்ப்பு

திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் ரேடார் அமைக்க கோரிக்கை; வெளியாகியுள்ள எதிர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.