எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குப் பிரதமர் பதவியை வழங்குவது குறித்து தேசிய மக்கள் சக்தி மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்த குழுக்கள் கலந்துரையாடியதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா வெளிப்படுத்தினார்.
அரசாங்கத்திற்குள் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குப் பிரதமர் பதவியை வழங்குவது மற்றும் அவரை தொடர்ந்து அனைவரும் ஒன்றுபடுவது குறித்து தேசிய மக்கள் சக்தி விவாதித்ததாகவும், உள்ளகக் கலந்துரையாடல்களை வெளியிடத் தாம் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
தற்போது அரசாங்கக் குழுக்கள் மட்டுமல்லாமல், பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த குழுக்களும் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், நாட்டுக்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்கத் தயாராக இருக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த (27) எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சஞ்சய பெரேரா,
எதிர்காலத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால் தேவையான தலைமைத்துவத்தை வழங்கத் தயாராக இருக்குமாறு அரசாங்கமும் பிற கட்சிகளும் எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
தற்போது அரசைத் தக்கவைப்பதில் சிரமம் நிலவுவதாகவும், அதனால்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடைசெய்யும் புதிய மசோதாவைக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.








