மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
வேகமாக சென்ற கார் வீதியை விட்டு விலகி கட்டுப்படுத்தமுடியாத நிலையில் மதில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் உடனடியாக கல்லாறு வைத்தியசாலைக்கு அப்பகுதியிலிருந்தவர்களினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.








