பொதுச் வீதிகளில் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட ஒலி அடக்கிகள் பொருத்தப்பட்ட வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தகைய வாகனங்கள் பொலிஸாரின் காவலில் எடுக்கப்படுவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் சோதனைகளும் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்கள அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாற்றியமைக்கப்பட்ட புகை வெளியேற்றும் அமைப்புகள் மற்றும் அதிக இரைச்சல் ஏற்படுத்தும் வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக அதிகரித்து வரும் புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.








