Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்

எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்பார்க்கப்படும் எல் நினோ காலநிலை மாற்றங்களினால் இலங்கைக்குப் பாரியளவில் பாதிப்புகள் ஏற்பட மாட்டாது என்று விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி என். ஏ. ஆர். டி. விக்ரமரச்சி தெரிவித்துள்ளார்.

பேராதனை, கண்ணொறுவாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

“பசுபிக் சமுத்திரம் உட்பட உலகின் பல பகுதிகளில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக கடல் நீர் வெப்பமடைவதையே ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் எனக் குறிப்பிடுகின்றனர். இதனால் கடுமையான வறட்சி ஏற்பட்டு விவசாயத்துறை பாதிக்கப்படலாம் என்றும், மழைவீழ்ச்சி குறைந்து, வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், நெல் உள்ளிட்ட விவசாய உற்பத்திகள் வீழ்ச்சியடையும் என்றும் சில எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இலங்கையின் புவியியல் அமைவிடம் மற்றும் எமக்குக் கிடைக்கின்ற பருவமழைப் பொழிவு ஆகியவற்றின் காரணமாக, இந்த எல் நினோ தாக்கத்தினால் நாடு கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளாது என்றே நாங்கள் கருதுகின்றோம். தற்போதைய நிலையை விட சற்று அதிகமான வெப்பநிலையும், ஓரளவுக்குக் கூடுதல் மழைவீழ்ச்சியும் ஏற்படலாமே தவிர, அச்சுறுத்தலான சூழல் உருவாகாது.

இருந்த போதிலும், இதனை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, குறைந்த நீர் விநியோகத்தைக் கொண்டு, வறட்சிக்குத் தாக்குப் பிடித்து வளரக்கூடிய உணவுப் பயிர்களை நாம் அடையாளம் கண்டு பயிரிட வேண்டும். எமது நாட்டைப் பொறுத்தமட்டில், குறைந்த காலத்தில் அறுவடை செய்யக்கூடிய, உலர் வலயத்திற்குப் பொருத்தமான நெல் ரகங்களைத் தெரிவு செய்து பயிரிடுவதன் மூலம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.

அத்துடன், நாட்டிற்குள் பயிரிடக்கூடிய குரக்கன், பயறு, சோளம் போன்ற உப உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும் இப்பிரச்சினைகளுக்கு ஓரளவுக்குத் தீர்வை எட்ட முடியும்.

இவ்வாறான ஒரு காலநிலை மாற்றம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த வேலைத்திட்டங்களை கடந்த கால அனுபவங்களின் மூலம் நாம் அறிந்துள்ளோம். நாட்டில் அனர்த்தங்கள் ஏற்பட்ட காலங்களில் எல்லாம் எமது நாட்டு விவசாயிகள் முன்வந்து கைகொடுத்தமையால், எமக்கு உணவுப் பிரச்சினைகள் பாரியளவில் ஏற்படவில்லை.

இலங்கை மக்களின் பிரதான உணவாக அரிசி காணப்படுவதுடன், அதில் நாம் தற்போது தன்னிறைவு அடைந்துள்ளோம். எனவே, எமது பிரதான உணவான அரிசி உற்பத்திக்கு இக்காலநிலை மாற்றத்தால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை
செய்திகள்

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

August 7, 2026
Next Post
கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.