வாகனங்களில் ஆசனப் பட்டிகள் (Seat Belts) பொருத்தப்படாதிருந்தால், அவற்றை நிறுவுவதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக வீதி பாதுகாப்பு பற்றிய தேசிய சபை அறிவித்துள்ளது.
அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவிக்கையில், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான ஆசனப் பட்டி தொடர்பான சட்டம் இன்று (20) முதல் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
இருப்பினும், உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் வழங்கப்படாத வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, இன்று (20) முதல் அமலுக்கு வரும் இந்த அவகாசக் காலத்திற்குள் சம்பந்தப்பட்ட வாகனங்களில் ஆசனப் பட்டிகள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இது இறுதி அவகாசமாக கருதப்படுவதாகவும், வாகனங்களில் ஆசனப் பட்டிகள் பொருத்தப்பட்டிருந்தால் சாரதியும் பயணிகளும் அவற்றை கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கும் அபராதத்திற்கும் உட்படுத்தப்படுவர் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.








