இன்றைய அநுரகுமார அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் என்னிடம் இருப்பதாகக் கூறப்பட்ட 18 லம்போர்கினிகளில் ஒன்றையாவது கண்டுபிடித்துத் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு அரசாங்கம் கண்டுபிடித்து தரும் லம்போர்கினியை ஓட்டுவதற்கு தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
கடந்த தேர்தல் காலத்திலும் அரசியல் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் அநுர அரசாங்கமும் அவர்களின் ஆதரவாளர்களும் பரப்பிய தீவிர விவாதப் பொருளாக இருந்த நாமலின் 18 லம்போர்கினி கார்கள் குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குறித்த அந்த கார்கள் இன்னும் யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த திசைகாட்டி அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த வாகனங்கள் இருக்கும் இடத்தைக் காட்டினால் அல்லது விமானம் மூலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் அந்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றில் ஒன்றை ஓட்டுவதற்கு தான் பெரும் ஆவலுடன் காத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.








