குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தனிநபர்கள் தங்கள் குடியிருப்புச் சொத்துக்கள் அல்லது சொந்த வாகனங்களை இனி வரி செலுத்தாமலேயே விற்பனை செய்யலாம் என்று இறைவரித் திணைக்களம் (IRD) தெளிவுபடுத்தியுள்ளது.
குடியிருப்புச் சொத்துகளைப் பொறுத்தவரை, விற்பனைக்கு முந்தைய குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குச் சட்டப்பூர்வ உரிமையை வைத்திருந்து, அக்காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்திருந்தால், விற்பனையாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இத்தகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டால், விற்பனை மூலம் கிடைக்கும் முழுத் தொகைக்கும் வரி விலக்கு உண்டு.
குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிள்ளைகளுக்குச் சொத்துகளை மாற்றுவதற்கும் வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும், மூன்றாம் தரப்பினருக்கு விற்கப்படும்போது மட்டுமே வரி விதிக்கப்படும்.
வாகனங்களைப் பொறுத்தவரை, திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் முந்தைய வரி விதிப்பு முறை நீக்கப்பட்டுள்ளது.
2024 ஏப்ரல் 1, முதல், தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்களின் விற்பனைக்கு, அவற்றின் வயது, நிலை அல்லது மொடல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், முழுமையான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த வரி விலக்கு தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், விற்பனை மூலம் கிடைக்கும் முழு லாபத்திற்கும் வரி இல்லை என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.








