ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில், ஆஸாத் மௌலானாவுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணப்படும் புகைப்படங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (24) சமர்ப்பிக்கப்பட்டன. எனினும், அவை அரசியல் நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட சாதாரண புகைப்படங்கள் மட்டுமே என்றும், அவற்றின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷவை தாக்குதலுடன் தொடர்புபடுத்தவோ கைது செய்யவோ முடியாது என்றும் அவரது தரப்பு வாதிட்டது.
மேலும், ஆஸாத் மௌலானா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குட்படுத்திய கோட்டாபய தரப்பு, அவரின் வாக்குமூலங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பது நியாயமற்றது என நீதிமன்றில் தெரிவித்தது. இந்தநிலையில் வழக்கு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6 மற்றும் 9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








