மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று (07) செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 5.00 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் 4 கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பில் தகவல் கிடைத்தவுடன், மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், தீ பரவியதன் காரணமாக கடைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பீடும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.









