நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் உயிரிழந்த 7 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் 19 கைதிகளுக்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர், சம்பவம் தொடர்பில் இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டார்.








