Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டல் அருகே இரட்டை குண்டுவெடிப்பு!

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டல் அருகே இரட்டை குண்டுவெடிப்பு!

1 hour ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

சிரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இன்று அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் நான்கு பொலிஸார் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அமைந்துள்ள ‘ஃபோர் சீசன்ஸ்’ ஹோட்டலுக்கு அருகில் இந்த வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. எனினும், சம்பவம் நிகழ்ந்த வேளையில் ஜனாதிபதி மக்ரோன் ஹோட்டலில் தங்கியிருக்கவில்லை என்றும், சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷராவை சந்திப்பதற்காக அதிபர் மாளிகைக்கு சென்று கொண்டிருந்ததாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை எலிசி அறிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி மக்ரோன் பாதுகாப்பாக இருப்பதுடன், அவரது சிரியா விஜயத்தின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் படி, ஹோட்டலுக்கு எதிரே அமைந்துள்ள சுற்றுலா அமைச்சகம் மற்றும் தேசிய அருங்காட்சியகத்திற்கு இடைப்பட்ட பகுதியில் குப்பைத் தொட்டி ஒன்றிலும், வாகனம் ஒன்றிலும் வெடிபொருட்கள் பொருத்தப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்ரோனின் பாதுகாப்பு வாகனப் பேரணி அந்தப் பகுதியைக் கடந்த சில நிமிடங்களிலேயே வெடிப்புகள் இடம்பெற்றதாகவும், இதனைத் தொடர்ந்து கரும்புகை பரவியதுடன் ஒரு வாகனம் தீப்பற்றி எரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து டமாஸ்கஸ் நகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை எந்த அமைப்பும் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பில் இருந்து மட்டு சிறைக்கு 60 கைதிகள் இடமாற்றம்
செய்திகள்

நீர்கொழும்பில் இருந்து மட்டு சிறைக்கு 60 கைதிகள் இடமாற்றம்

July 8, 2026
மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!
செய்திகள்

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!

July 7, 2026
பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!
செய்திகள்

பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!

July 7, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!

July 7, 2026
வாழைச்சேனை தாமரைக்குளத்தில் வலை எடுக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!
செய்திகள்

வாழைச்சேனை தாமரைக்குளத்தில் வலை எடுக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!

July 7, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு

July 7, 2026
Next Post
நீர்கொழும்பில் இருந்து மட்டு சிறைக்கு 60 கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பில் இருந்து மட்டு சிறைக்கு 60 கைதிகள் இடமாற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.