கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களிடையேயும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை கொழும்பு பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது பல்கலைக்கழகத்தின் சுமார் 70 மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான ஆலோசனை இதுவரை வழங்கப்படவில்லை என கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீ பிரதாபன் தெரிவித்துள்ளார்.
டெங்கு பரவல் காரணமாக, கொழும்பு அழகியல் கலைகள் பல்கலைக்கழகம் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகம் ஆகியவை ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








