Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் தீவிரம்; பதற்றம் மேலும் அதிகரிப்பு

ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் தீவிரம்; பதற்றம் மேலும் அதிகரிப்பு

44 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானின் தெற்குப் பகுதிகளில் அமைந்துள்ள ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட நகரங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கடல்சார் தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், ஈரானிய இராணுவத்தின் தாக்குதல் திறனைக் குறைக்கும் வகையில் பாதுகாப்புப் படைத் தளபதியின் உத்தரவின் பேரில் இந்த இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது, ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் பகுதிகளில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா அண்மையில் ஈரானின் பல இராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன்கள், போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்களின் உதவியுடன் துல்லியத் தாக்குதல்களை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தாக்குதல்களில் ஈடுபட்ட தரப்பினரை அமெரிக்கப் படைகள் முறியடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மறுபுறம், ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்கள் தாம் அறிவுறுத்திய கடல் வழித்தடங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் அவற்றின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க முடியாது என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதுடன், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்த சர்வதேச கவலைகளும் அதிகரித்துள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஓய்வுபெறும் வயது மாற்றம் குறித்து அரசாங்கம் பரிசீலனை!
செய்திகள்

ஓய்வுபெறும் வயது மாற்றம் குறித்து அரசாங்கம் பரிசீலனை!

July 13, 2026
உலகக்கிண்ணத்தில் ‘தங்க காலணி’ விருதுக்கான போட்டி விறுவிறுப்பு!
செய்திகள்

உலகக்கிண்ணத்தில் ‘தங்க காலணி’ விருதுக்கான போட்டி விறுவிறுப்பு!

July 13, 2026
பேங்கொக் களியாட்ட விடுதியில் பயங்கர தீ விபத்து; 27 பேர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

பேங்கொக் களியாட்ட விடுதியில் பயங்கர தீ விபத்து; 27 பேர் உயிரிழப்பு!

July 13, 2026
இன்று முதல் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பம்!
செய்திகள்

இன்று முதல் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பம்!

July 13, 2026
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் உயர்வு
செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் உயர்வு

July 13, 2026
மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடையுடன் பாடசாலைக்கு வர அனுமதி
செய்திகள்

மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடையுடன் பாடசாலைக்கு வர அனுமதி

July 12, 2026
Next Post
உலகக்கிண்ணத்தில் ‘தங்க காலணி’ விருதுக்கான போட்டி விறுவிறுப்பு!

உலகக்கிண்ணத்தில் 'தங்க காலணி' விருதுக்கான போட்டி விறுவிறுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.