களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பில் இன்று (13) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மின்சாரக் கட்டமைப்பின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக களுத்துறை மாவட்டச் செயலகத்திற்கான மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







