இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால் அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்க கூடாது கிழக்கு மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று (12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டுமெனில் அது சம்பந்தப்பட்ட தரப்பினரின் சொந்த காணியில் அல்லது தனியார் இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்றும், பொது இடத்தில் அமைப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் பொது இடத்தில் நினைவுச் சிலை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அதற்கு தமது கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறைச்சாலைகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சட்டவிரோதச் செயல்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜெயா சரவணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.







