அநுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதராவ பகுதியைச் சேர்ந்த புஞ்சாகே களுமெனிகே (Punchage Kalumenike), தனது 114ஆவது வயதில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1912 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி பிறந்த அவர், அண்மையில் தனது 114ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.
பிறந்தநாளுக்குப் பின்னர் ஏற்பட்ட விபத்தில் கீழே விழுந்து காயமடைந்த அவர், அதனைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சுமார் இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீண்ட ஆயுளுடன் வாழ்ந்த களுமெனிகே, 12 பிள்ளைகளின் தாயாக இருந்ததுடன், கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் எள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 325 வாரிசுகளைக் கொண்ட பெரிய குடும்ப மரபை விட்டுச் சென்றுள்ளார்.








