Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தரமான பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; ஜனாதிபதி

தரமான பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; ஜனாதிபதி

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அனைத்து மக்களுக்கும் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்துச் சேவையை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

தரமான பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதன் மூலம், தனிப்பட்ட போக்குவரத்திற்காக மக்கள் மேற்கொள்ளும் செலவினங்களை குறைத்து, அனைவருக்கும் பயனளிக்கும் போக்குவரத்து அமைப்பை உருவாக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், இலவச சுகாதாரச் சேவையின் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் போலவே, பொதுப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கலந்துரையாடலின் போது, பழைய பேருந்துகளை படிப்படியாக சேவையிலிருந்து நீக்கி புதிய பேருந்துகளை இணைக்கும் திட்டம், நகர்ப்புற குறுகிய தூரப் பயணங்களுக்கு மெட்ரோ வகை பேருந்துகளை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் அடுக்குமாடி வீடமைப்பு, நகர்ப்புற கழிவு முகாமைத்துவம் மற்றும் நகர மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது.

அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்யக்கூடிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து தேவையான நிதியை ஒதுக்குமாறும், வெளிநாட்டு கடன் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தெளிவான பயன்கள் உறுதி செய்யப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடும்!
செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடும்!

July 13, 2026
8 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
செய்திகள்

8 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

July 13, 2026
இரா. சம்பந்தனுக்கு பொது இடத்தில் சிலை அமைக்க எதிர்ப்பு; ஈழத் தமிழர் முன்னணி!
செய்திகள்

இரா. சம்பந்தனுக்கு பொது இடத்தில் சிலை அமைக்க எதிர்ப்பு; ஈழத் தமிழர் முன்னணி!

July 13, 2026
முன்பள்ளி பிள்ளைகளுக்கு முழுக்கை ஆடைகள் அணிவிக்க பெற்றோருக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

முன்பள்ளி பிள்ளைகளுக்கு முழுக்கை ஆடைகள் அணிவிக்க பெற்றோருக்கு அறிவுறுத்தல்!

July 13, 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்

July 13, 2026
ஐரோப்பாவை தாக்கிய கடும் வெப்ப அலை; ஒரே வாரத்தில் 10,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!
செய்திகள்

ஐரோப்பாவை தாக்கிய கடும் வெப்ப அலை; ஒரே வாரத்தில் 10,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!

July 13, 2026
Next Post
ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடும்!

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.