நோயாளிகள் இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக தனியார் ஆய்வகங்களை நாடி கூடுதல் செலவினை மேற்கொள்ள வேண்டிய நிலையை குறைக்கும் நோக்கில், அரசு மருத்துவமனைகளுக்கு புதிய நவீன பரிசோதனை இயந்திரங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களின் சேவைகள் மற்றும் கட்டணங்களை முறையாக ஒழுங்குபடுத்தும் வகையில், சுகாதார அமைச்சுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், துணை மருத்துவ அதிகாரிகள் ஆட்சேர்ப்பு, பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வது உள்ளிட்ட விடயங்களும் தொடர்புடைய தரப்புகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.








