நிலவும் சீரற்ற வானிலை நிலவரத்தை முன்னிட்டு, நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சை தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை (05) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

தற்போதைய மழைக்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பரீட்சைகளை பாதுகாப்பாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.







