செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து
தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம்
காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் திங்கட்கிழமை
முன்னெடுப்பட்டன.
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட
அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள்
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம்
அனுமதி வழங்கிய நிலையில், 48ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை 09 என்பு கூடுகள்
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07
என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாட்டின் காலில் அடிக்கப்பட்டும் லாடம் ஒன்றும், கை வளையல் ஒன்றும் சான்று பொருளாக
மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை எழுமாறாக தோண்டப்பட்ட சோதனைக்குழிகள் இரண்டில் ஒரு குழியில் தலையில்லா
முண்டமான என்புக்கூடு உட்பட 03 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மற்றைய
குழியில் இருந்தும் ஒரு என்புக்கூடு அடையாளம் காணப்பட்டு, முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.








