கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் முழுமையான காணொளிப் பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி செயலகம் பதிலளித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேரா கையொப்பமிட்டுள்ள கடிதத்தில், சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கூட்டத்தில் ஆற்றிய உத்தியோகபூர்வ உரைகளின் தொகுக்கப்படாத காணொளிப் பதிவுகள் கடந்த 12ஆம் திகதியே சங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் அடங்கிய காணொளிப் பதிவுகளையும் உரிய உத்தியோகபூர்வ நடைமுறைகளுக்கு அமைவாக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளிப் பதிவுகளை முறையாகவும் சரியான முறையிலும் வழங்குவதற்கு ஜனாதிபதி செயலகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அந்தக் கடிதத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.







