அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்தல் மற்றும் நீதித்துறை தொடர்பான புதிய திருத்தங்களை உள்ளடக்கி இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இதில் உள்ள சில சரத்துகள் நாட்டின் ஜனநாயகத்திற்கோ அல்லது நீதித்துறையின் சுயாதீனத்திற்கோ சாதகமாக அமையாது என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே, குறித்த திருத்தச் சட்டமூலத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் அதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் எதிர்ப்பைப் பதிவு செய்யப்போவதாகவும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்








