மீகஹவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கொட பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
பியகமவிலிருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வலதுபுறமாகத் திரும்ப முற்பட்டபோது, எதிர்திசையில் வந்த கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்து உடுபில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், முச்சக்கர வண்டியின் சாரதி, பெண்ணொருவர் மற்றும் ஏழு வயது சிறுமி ஆகிய மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும், சியம்பலபே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணும் அவரது ஏழு வயது மகளும் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதனிடையே, காரில் பயணித்த மற்றொரு சிறுமியும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகஹவத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








