அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
பரீட்சை முடிவுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை எதிர்வரும் செப்டெம்பர் 03ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








