வவுனியா, புரவசம்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ, இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரின் துரித நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
புரவசம்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து கிடைத்த தகவலையடுத்து, தீ மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதன்போது, தீயை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படையினரின் துரித நடவடிக்கை காரணமாக, அருகிலிருந்த வனப்பகுதி மற்றும் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு ஏற்படக்கூடிய பாரிய சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








