யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில், அவர் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

400ஐ கடந்த பாதிப்பு
சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 9.30 மணி நிலவரப்படி 400ஐ கடந்துள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
எனினும், தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த எண்ணிக்கை தற்போது 400ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









