குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படவுள்ள கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை (23) அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில், பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தப் புலமைப்பரிசில் திட்டம், லொத்தர் சீட்டு விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்துக்கு கிடைக்கும் நிதிப் பங்களிப்பை கருத்திற்கொண்டு, லொத்தர் சீட்டு விற்பனையாளர்களுக்கு நன்றிக் கடனாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில், முதலாம் தரம் முதல் உயர்தரம் வரை கல்வி பயிலும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு இந்தப் புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.








