நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக இலங்கையிலிருந்து பேரிடர் நிவாரணக் குழுக்களை அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய இந்தக் குழுக்களின் எண்ணிக்கை மற்றும் அமைப்பு தொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் குழுக்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நேபாளத்திற்கு அவசர உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.







