Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

13 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15 கூட்டமைப்புகள் இணைந்து இன்றைய தினம் (31) நாடளாவிய ரீதியில் கவன ஈர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
அரசு மற்றும் மாகாண அரச சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களது உரிமைகளுக்காக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கு முன்பாகவும் இப்போராட்டம் மதியம் 12:00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 27 வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்த கோரிக்கைகள் தொடர்பிலான போராட்டங்கள் தொடர்கின்றன. குறிப்பாக 1999ஆம் ஆண்டிலிருந்து சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முறையான சேவைப் பிரமாணக் குறிப்பு இதுவரை இல்லாதது கவலையளிக்கும் விடயமாகவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையிலும், இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல என்றும், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே நாடு தழுவிய ரீதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் சுமார் 1,50,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரச சேவையில் கடமையாற்றி வருகின்றனர். நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் இவர்களுக்கு, தற்போதைய வாழ்க்கைச் செலவு உயர்விற்கு ஏற்ப கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. கல்வித் தகைமைக்கேற்ப சம்பளக் குறியீடு மற்றும் சம்பள அதிகரிப்பு வழங்குதல், பயணக் கொடுப்பனவை 2,000 முதல் 2,500 வரை அதிகரித்தல், மற்றும் விசேட தரம் உள்ளடங்கிய பதவி உயர்வு வழங்குதல் ஆகிய பிரதான கோரிக்கைகள் இங்கு முன்வைக்கப்பட்டன.

அத்துடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலையான பெயர் மற்றும் சேவை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும், பதவி உயர்வுக்கான கால எல்லையை 10 வருடங்களிலிருந்து 5 வருடங்களாக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அலுவலகங்கள், சமூகம் மற்றும் வீடுகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சுயகௌரவமும் மரியாதையும் பாதுகாப்பப்பட வேண்டும் என்றும், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாகாண சபை மற்றும் மத்திய அரசுக்குட்பட்ட 15 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தங்களுக்குரிய உரிய தீர்வுகள் கிடைக்கப்பெற வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

https://youtu.be/zNhQQfltXAc
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அர்ச்சுனாவின் எம்.பி. பதவிக்கு எதிரான மனு; உயர் நீதிமன்றத்திற்கு அனுப்ப கோரிக்கை!
செய்திகள்

அர்ச்சுனாவின் எம்.பி. பதவிக்கு எதிரான மனு; உயர் நீதிமன்றத்திற்கு அனுப்ப கோரிக்கை!

August 31, 2026
எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!
செய்திகள்

எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

August 31, 2026
பாண் விலை அதிகரிப்பு; இன்று நள்ளிரவு முதல் புதிய விலை அமுல்!
செய்திகள்

பாண் விலை அதிகரிப்பு; இன்று நள்ளிரவு முதல் புதிய விலை அமுல்!

August 31, 2026
அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேகநபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தல்!
செய்திகள்

அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேகநபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தல்!

August 31, 2026
வீடு மீது தாக்குதல் குற்றச்சாட்டு; பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல்!
செய்திகள்

வீடு மீது தாக்குதல் குற்றச்சாட்டு; பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல்!

August 31, 2026
கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!

August 31, 2026
Next Post
அர்ச்சுனாவின் எம்.பி. பதவிக்கு எதிரான மனு; உயர் நீதிமன்றத்திற்கு அனுப்ப கோரிக்கை!

அர்ச்சுனாவின் எம்.பி. பதவிக்கு எதிரான மனு; உயர் நீதிமன்றத்திற்கு அனுப்ப கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.