இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அண்மையில் ஒரு கிலோகிராமுக்கு 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், உற்பத்திச் செலவு உயர்ந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.








