இலங்கையின் வடக்கில் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழிகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, பிரித்தானியாவின் லிவர்பூல் நகரில் நினைவேந்தல் நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
லிவர்பூல் லைம் ஸ்ட்ரீட் ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமான இந்த அமைதி நடைபயணம், நகரின் முக்கிய பகுதிகளைக் கடந்து எவர்டன் பார்க் பகுதியைச் சென்றடைந்தது.

நடைபயணத்தில் பங்கேற்றவர்கள், இலங்கையில் பல்வேறு காலகட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பான பதாகைகள் மற்றும் காலவரிசை விளக்கப் பலகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் இந்த நினைவேந்தல் நடைபயணம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.










