Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மக்களாணையை தெரிந்துகொள்ள உடனடியாக தேர்தலை நடத்துங்கள்; மீண்டும் வலியுறுத்துகிறது பொதுஜன பெரமுன!

மக்களாணையை தெரிந்துகொள்ள உடனடியாக தேர்தலை நடத்துங்கள்; மீண்டும் வலியுறுத்துகிறது பொதுஜன பெரமுன!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மக்களாணையை தெரிந்துக் கொள்ள அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் பண்டாரவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை 2019 ஆம் ஆண்டு தோற்றுவித்தார்கள்.

எமது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ எடுத்த தவறான தீர்மானங்களினால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டதால் அரசியல் ரீதியில் நெருக்கடிகள் தோற்றம் பெற்று பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.பொருளாதார பாதிப்பை கொண்டு ஒரு தரப்பினர் நாட்டை பலவீனப்படுத்த முயற்சித்தார்கள்.

இந்நிலையில், பொருளாதார பாதிப்பு மத்தியில் நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் தெரிவு செய்துள்ளோம் என்பதற்காக அவர் எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியாது.

தவறான தீர்மானங்களுக்கு எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது.அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது.

நாடு தற்போது ஸ்திரமடைந்துள்ளது.ஆகவே அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.பொருளாதார பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது.மக்களாணையை தெரிந்துக் கொள்ள அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.தேர்தலை நடத்துமாறு அரச தலைவர்களுக்கு அழுத்தம் பிரயோகிப்போம் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

July 28, 2026
Next Post
LECO மின் கட்டணங்களுக்கு சேர்க்கப்படும் புதிய வரி; செப்டம்பர் மாதத்திலிருந்து வசூலிப்பு!

LECO மின் கட்டணங்களுக்கு சேர்க்கப்படும் புதிய வரி; செப்டம்பர் மாதத்திலிருந்து வசூலிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.