Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி மட்டக்களப்பு விஜயம்; கோப்பைகளை ஏந்தி காலநடை பண்ணையாளர்களும் போராட்டம்!

ஜனாதிபதி மட்டக்களப்பு விஜயம்; கோப்பைகளை ஏந்தி காலநடை பண்ணையாளர்களும் போராட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைதந்த நிலையில் சித்தாண்டியில் பண்ணையாளர்கள் கைகளில் கோப்பைகளை ஏந்தியவாறு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை காணிகள் பெரும்பான்மை சிங்களவர்களினால் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கடந்த 23நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவரும் நிலையில், நேற்றும் (07.10.2023) போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று வருகை தந்தமையினையொட்டி கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கைகளில் கோப்பைகளை ஏந்தி தமது நிலங்ளை தங்களுக்கு வழங்குமாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை சந்திவெளி பொலிஸார் மற்றும் ஏறாவூர் பிரதேச பிரதி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக போராட்டத்திற்கு எதிரான தடையுத்தரவு வழங்க முற்படுகையில், பொலிஸாருக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் நீதிமன்ற கட்டளையினை இதுவரையில் நடைமுறைப்படுத்தாத பொலிஸார் அமைதியான முறையில் போராடிவரும் தமக்கு தடையுத்தரவு வழங்குவதா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதனை தொடர்ந்து கால்நடைபண்ணையாளர்களின் போராட்டம் தொடர்பான நீதிமன்ற கட்டளை வாசிக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த சுவரில் பொலிஸாரினால் நீதிமன்ற கட்டளை ஒட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அமைதியான முறையில் பண்ணையாளர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கேகாலையில் 6 வாகனங்கள் மோதிய கோர விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்!
செய்திகள்

கேகாலையில் 6 வாகனங்கள் மோதிய கோர விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்!

June 23, 2026
போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவனின் பல்கலை தகுதி இரத்து
செய்திகள்

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவனின் பல்கலை தகுதி இரத்து

June 23, 2026
270,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று அஸ்வெசும கொடுப்பனவு!
செய்திகள்

270,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று அஸ்வெசும கொடுப்பனவு!

June 23, 2026
உலகின் சக்திவாய்ந்த குவாண்டம் கணினியை உருவாக்கும் உத்தரவை பிறப்பித்த ட்ரம்ப்
உலக செய்திகள்

உலகின் சக்திவாய்ந்த குவாண்டம் கணினியை உருவாக்கும் உத்தரவை பிறப்பித்த ட்ரம்ப்

June 23, 2026
அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; முக்கிய உடன்பாடுகளுடன் முதற்கட்ட அமர்வு நிறைவு!
செய்திகள்

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; முக்கிய உடன்பாடுகளுடன் முதற்கட்ட அமர்வு நிறைவு!

June 23, 2026
2.5 மில்லியன் டொலர் விவகாரம்; இன்று மீண்டும் கூடும் அரசாங்க நிதி குழு!
செய்திகள்

2.5 மில்லியன் டொலர் விவகாரம்; இன்று மீண்டும் கூடும் அரசாங்க நிதி குழு!

June 23, 2026
Next Post
தென்னாபிரிக்கா-இலங்கையை வீழ்த்தியது!

தென்னாபிரிக்கா-இலங்கையை வீழ்த்தியது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.