Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்களை ஹர்த்தாலுக்கு அழைத்துவிட்டு தமது கருமங்களை செய்ய சென்ற தமிழ் எம்.பிக்கள்!

தமிழ் மக்களை ஹர்த்தாலுக்கு அழைத்துவிட்டு தமது கருமங்களை செய்ய சென்ற தமிழ் எம்.பிக்கள்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் கட்சிகளால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் நேற்றையதினம்(20) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஹர்த்தாலை புறந்தள்ளி தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு விடுத்த அச்சுறுத்தல் மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல்தரை அபகரிப்பு போன்ற தமிழர் பகுதி ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக இணைந்து அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழ் தேசிய கட்சிகளின் அழைப்பை ஏற்று நேற்றையதினம் வடக்கு கிழக்கு எங்கும் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில், மக்களை வேலைகளை பகிஷ்கரித்து பூரண ஹர்தாலை அனுஷ்டிக்கும்படி வேண்டுகோள் விடுத்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்றையதினம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.

நேற்றைய ஹர்த்தாலால் வர்தகர்கள் , ஓட்டோ சாரதிகள், தனியார் பஸ் சாரதிகள், தொழிலாளர்கள் முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி வேண்டி தமது வேலைகளைப் பகிஷ்கரிப்பு செய்ய அறிக்கைவிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தானே அந்த வேண்டுகோளை மீறி பாராளுமன்றம் சென்றமை மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதன் காரணமாக அவர்மீது தமிழரசுக் கட்சி கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா? என கட்சித் தலைவரான மாவை.சேனாதிராஜாவிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அறியமுடிகின்றது.

ஊருக்கு உபதேசம் தனக்கு இல்லை என்றவகையில் தமிழ் பொதுமக்களுக்கு ஒருநீதி, தமிழரசுக்கட்சித் தலைவர்களுக்கு ஒரு நீதியா? என சமூகவலைத்தளங்களில் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனம் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்
செய்திகள்

யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்

June 9, 2025
கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்
செய்திகள்

கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

June 9, 2025
நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்
உலக செய்திகள்

நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

June 9, 2025
கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்
செய்திகள்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்

June 9, 2025
வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு
செய்திகள்

வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

June 9, 2025
கிழக்கை காப்பற்ற கிழக்கு தமிழ் கூட்டமைப்புடன் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று இணையவேண்டும்; கருணா அம்மான் தெரிவிப்பு
செய்திகள்

கிழக்கை காப்பற்ற கிழக்கு தமிழ் கூட்டமைப்புடன் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று இணையவேண்டும்; கருணா அம்மான் தெரிவிப்பு

June 9, 2025
Next Post
வடக்கு ரயில் சேவைகளில் நேர மாற்றம்!

வடக்கு ரயில் சேவைகளில் நேர மாற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.