Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குழந்தைகளின் கல்லறையாக மாறி வரும் காஸா; ஐ .நா பொதுச்செயலாளர் கவலை!

குழந்தைகளின் கல்லறையாக மாறி வரும் காஸா; ஐ .நா பொதுச்செயலாளர் கவலை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மையானதாக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

காஸா பகுதி குழந்தைகளின் கல்லறையாக மாறி வருகிறது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த கொடூரமான, பயங்கரமான, வேதனையான அழிவின் நெருக்கடியில் இருந்து மீள நாம் ஒன்றாக செயல்பட வேண்டும் எனவும் மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்க உடனடியாக போர் நிறுத்தம் அவசியம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய மக்கள் 1,400 பேரை கொன்று 240க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்ற நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிக்க இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது.

இதனையடுத்து காஸாவை வான்வழியாக தாக்கி, முற்றுகையிட்டு, தரைவழி ஆக்கிரமிப்பை நடத்தி வருகிறது இஸ்ரேல் ராணுவம். இந்த நிலையில், காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குட்டரெஸ் தெரிவிக்கையில், காஸா குழந்தைகளின் கல்லறையாக மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர்.

இஸ்ரேல் தரப்பு சர்வதேச மனிதாபிமான சட்டத்தினை வெளிப்படையாகவே மீறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காஸா மற்றும் மேற்குக் கரையில் உள்ள 2.7 மில்லியன் மக்களுக்கு உதவி வழங்க ஐ.நா.விற்கு 1.2பில்லியன் டொலர் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, பாலஸ்தீன அகதிகள் அமைப்பில் (UNRWA) பணியாற்றிய 89 பேர் காஸாவில் கொல்லப்பட்டதாக குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

போருக்கு முன்பு ஒரு நாளைக்கு 500 லொறிகள் காஸா பகுதிக்கு சென்ற நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 400க்கும் அதிகமான லொறிகள் காசாவுக்குள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
செய்திகள்

கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

June 10, 2025
திருமண பந்தத்தில் இணைந்த தனது மகளுக்கு 100 பூனைக்குட்டிகளை வரதட்சணையாக வழங்கிய பெற்றோர்
உலக செய்திகள்

திருமண பந்தத்தில் இணைந்த தனது மகளுக்கு 100 பூனைக்குட்டிகளை வரதட்சணையாக வழங்கிய பெற்றோர்

June 10, 2025
சிலருக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது; சாடும் சுமந்திரன்
அரசியல்

சிலருக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது; சாடும் சுமந்திரன்

June 10, 2025
ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு
அரசியல்

ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு

June 10, 2025
மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்
செய்திகள்

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்

June 10, 2025
திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்
செய்திகள்

திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்

June 10, 2025
Next Post
மண்முனை வடக்கில் நடைபெற்ற நடமாடும் சேவை!

மண்முனை வடக்கில் நடைபெற்ற நடமாடும் சேவை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.