Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு; பொலிஸார் மீது சித்திரவதை குற்றச்சாட்டு!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு; பொலிஸார் மீது சித்திரவதை குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள்

திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தமது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 4 நாள்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்த பின்னரே நீதிமன்றில் முற்படுத்தியதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இன்றையதினம் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாள்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுமில்லை விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

உயிரிழந்தவரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.

அதனால் சந்தேக நபர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர் சிறைச்சாலையில் இருந்த போது சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உடற்கூறு அறிக்கைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்
செய்திகள்

சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

June 14, 2025
ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேலின் ஒரு பகுதி பாரிய சேதம்
உலக செய்திகள்

ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேலின் ஒரு பகுதி பாரிய சேதம்

June 14, 2025
பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்; காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் சங்கம்
செய்திகள்

பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்; காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் சங்கம்

June 14, 2025
அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை
செய்திகள்

அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை

June 14, 2025
ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்திப்பு
செய்திகள்

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்திப்பு

June 14, 2025
துருக்கிய தூதுவரை சந்தித்த பதில் பாதுகாப்பு அமைச்சர்; இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு முக்கிய உரையாடல்
செய்திகள்

துருக்கிய தூதுவரை சந்தித்த பதில் பாதுகாப்பு அமைச்சர்; இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு முக்கிய உரையாடல்

June 14, 2025
Next Post
2023 உலகக்கிண்ணம்; வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது அவுஸ்திரேலியா!

2023 உலகக்கிண்ணம்; வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது அவுஸ்திரேலியா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.