Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காணாமலாக்கப்பட்ட உறவினர்களிடமிருந்து மேலதிக விபரம் திரட்டும் நடவடிக்கை!

காணாமலாக்கப்பட்ட உறவினர்களிடமிருந்து மேலதிக விபரம் திரட்டும் நடவடிக்கை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காணாமல் போனோர் உறவுகளிடமிருந்து மேலதிகமான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் நேற்று முன்தினம் (20) துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் துணுக்காய், ஐயங்குளம், புத்துவெட்டுவான், கோட்டைகட்டிய குளம் பகுதிகளிலிருந்து நேற்று வருகை தந்து, சாட்சியமளித்து ஆவணங்களை வழங்கியிருந்தனர்.

அவ்வேளை, கருத்து தெரிவித்த காணாமல் போனோரின் உறவுகள், தமக்கு இழப்பீடுகள் எதுவும் தேவையில்லை என்றும், காணாமல்போன தமது உறவுகளின் இறப்புச் சான்றிதழ்களை வழங்க எத்தனிப்பதாகவும் தெரிவித்ததோடு, தமது உறவுகளை திருப்பி அனுப்புமாறு கோரியுள்ளனர்.

அத்துடன், கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகர், எமக்கு இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 5000 முறைப்பாடுகள் இராணுவ முப்படைகளின் முறைப்பாடுகள். அதிலும் இரட்டிப்பு செய்யப்பட்ட முறைப்பாடுகளாக 15 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும், அவர், இது தொடர்பில் தாம் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், கிடைத்தவற்றுள் 4786 முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை தாம் முடித்துள்ளதாகவும், அவற்றில் 3400 விண்ணப்பங்களில் இடைக்கால நிவாரணத்தை பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரியுள்ளதாகவும், அவற்றில் 1300 விண்ணப்பங்கள் இழப்பீட்டு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் என்பவற்றை உரிய விசாரணைகள் செய்து, உறவுகளை தேடும் மக்களுக்கு வழங்க தமது அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
சிறந்த புகைப்படக் கலைஞராக எட்டு வயது சிறுமி தெரிவு!

சிறந்த புகைப்படக் கலைஞராக எட்டு வயது சிறுமி தெரிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.