Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் 15 மாடுகள் கொலை; கால்நடை பண்ணையாளர்கள் கவலை!

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் 15 மாடுகள் கொலை; கால்நடை பண்ணையாளர்கள் கவலை!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் 15மாடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும் அதிகமான மாடுகள் காணாமல்போயுள்ளதாக மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல அமைப்பு தெரிவித்துள்ளது.

மயிலத்தமடு,மாதவனைபகுதியில்சட்டவிரோதபயிர்ச்செய்கையாளர்களினல் தற்போதுகால்நடைகள்மீதுதாக்குதல்கள்முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் இதனை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அழியும் பண்ணையாளர்களின் பொருளாதாரம்கடந்த 26ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் சுட்டும்,சுருக்கிட்டும் 15க்கும் அதிகமான மாடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும் அதிகமானமாடுகள்காணாமல்போயுள்ளதாகமயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல அமைப்பின் தலைவர் சீ.நிமலன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேய்ச்சல் தரை காணிகளை பிடித்து பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படுவதன் காரணமாக தினமும் பசுக்கன்றுகள் உணவு இல்லாமல் சாகும் நிலையேற்பட்டுள்ளதாகவும் உடனடியாக இதற்கான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் நிலைமை மோசமடையும் நிலைமையேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் செயற்பாடுகள் காரணமாக கால்நடை பண்ணையாளர்களின் பொருளாதாரம் அழிந்துசெல்லும் நிலைமை காணப்படுவதாகவும் இதன்காரணமாக கால்நடை பண்ணையாளர்கள் மனநோய்க்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுவருவதாகவும் நிமலன் தெரிவித்துள்ளார்.

கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்ந்தும் 105நாட்களையும் கடந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இதுவரையில் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரையில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதிகளை கணக்கிடமுடியாத நிலையுள்ளதாகவும் மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல அமைப்பின் தலைவர் சீ.நிமலன் தெரிவித்துள்ளார்.

தமக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்ட பொலிஸ் காவலரண் முற்றுமுழுதாக அத்துமீறிய செய்கையாளர்களுக்கு உறுதுணையாகவுள்ளதாகவும் நீதிமன்ற தீர்ப்பினைக்கூட நடைமுறைப்படுத்தமுடியாத வகையில் அங்குள்ள பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
மதுபானம் பதுக்கி வைப்பவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்; கலால் திணைக்களம் எச்சரிக்கை!

மதுபானம் பதுக்கி வைப்பவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்; கலால் திணைக்களம் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.