Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்டிப்பொங்கல் நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்திய மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்!

பட்டிப்பொங்கல் நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்திய மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

உலகமெங்கும் தமிழர்களினால் இன்று பட்டிப்பொங்கல் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
உழவுத்தொழிலுக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் இன்றைய பட்டிப்பொங்கல் நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்தி மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் மேலாடையின்றி கைகளில் பொங்கல் பானைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடிய கால்நடை பண்ணையாளர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் 124 நாள் கடந்துள்ள நிலையில் 124 பொங்கல் பானைகளை கறுப்பு நாடா கட்டி அதனை தலைகளில் ஏந்தி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கால்நடை பண்ணையாளர்கள் காந்திபூங்காவிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் ஊர்வலமாக சென்று மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம், மட்டக்களப்பிலுள்ள பண்ணையாளர்கள், விவசாய அமைப்பினர், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்து,கால்நடைகளின் உயிரைப்பறிக்காதே,எமது நிலம் எமக்கு வேண்டும்,மயிலத்தமடுமாதவனை எங்கள் சொந்த நிலம்,சர்வதேசமே நீதியைப்பெற்றுக்கொடு,பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தில் கைவைக்காதே போன்ற பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் அமைதியான முறையில் கால்நடை பண்ணையாளாகள் ஊர்வலமாக சென்ற நிலையில் மாவட்ட செயலகத்தின் முன்வாயில் கதவுகள் பொலிஸாருடன் மூடப்பட்டதுடன் பண்ணையாளர்கள் மாவட்ட செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் பண்ணையாளர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதுடன் சிலரை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.

இந்த பேச்சுவார்த்தையில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மயிலத்த,மடுமாதவனை பண்ணையாளர் சங்க தலைவர்கள்,உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பண்ணையாளாகளின் வேண்டுகோளுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் வரவழைக்கப்பட்டதுடன் மயிலத்த,மடுமாதவனை பகுதியில் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.
பண்ணையாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.முரளிதரன் இதன்போது தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
செய்திகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்
செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்

June 8, 2025
உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
செய்திகள்

உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

June 8, 2025
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு
செய்திகள்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு

June 8, 2025
மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடியவர்கள் 06 மாதம் கழித்து கைது
மட்டு செய்திகள்

மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடியவர்கள் 06 மாதம் கழித்து கைது

June 8, 2025
தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்
அரசியல்

தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்

June 8, 2025
Next Post
30 வகையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

30 வகையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.