நிலவும் தொடர் கனமழையால் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு ஹட்டனிலிருந்து நீர் பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்துள்ளதால், அதன் இருமருங்கிலும் அமைந்துள்ள பல வீடுகள் இன்று (03) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாக நினைவுகூரும் பிரதேச மக்கள், கால்வாய் மீண்டும் பெருக்கெடுத்ததால் தங்களது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில், மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருந்து அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.











