Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரண்டாவது நாளாகவும் சுத்திகரிப்பு பணி; உதவிக்கு விரைந்தது அக்கரைப்பற்று மாநகரசபை!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரண்டாவது நாளாகவும் சுத்திகரிப்பு பணி; உதவிக்கு விரைந்தது அக்கரைப்பற்று மாநகரசபை!

2 years ago
in செய்திகள்

அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் சில பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. இதில் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தன.

மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22.01.2024 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில் இரண்டாது நாளாகவும் சுத்திகரிக்கும் நிகழ்வு இன்றும் இடம்பெற்றது.

 இன்றைய சுத்திகரிப்புப் பணியில் அக்கரைப்பற்று மாநகரசபையின் தீ அணைப்பு பிரிவும் இணைந்து கொண்டது. இன்றைய நிகழ்வில் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்த்தவ தேவாலயங்கள் ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டன.

உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கருடன் நூலகர் எம்.எம்.றிபாவுட்டீன் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், அரபு மற்றும் இஸ்லாமிய பீடத்தின் பீடாதிபதி எம்.எச்.ஏ. முனாஸ், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா எம்.ஜி.எச்., பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, வேலைப்பகுதி பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸில், மற்றும் பேராசிரியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் எம்.ரீ.எம். தாஜுதீன், செயலாளர் எம்.எம். முஹம்மட் காமில் உள்ளிட்ட பலரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

சுத்திகரிப்புப் பணிகள் இடம்பெற்றுவரும் அதேவேளை சேதங்கள் தொடர்பில் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டால் கையாளவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் கருத்து வெளியிட்டார். அத்துடன், சேதங்கள், மீள் கட்டுமானம் மற்றும் எதிர்கால அனர்த்த தவிர்ப்பு திட்டவரைபுகள் தொடர்பிலும் விரைவில் சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சுத்திகரிப்பு பணிகளில் இன்றும் மிகுந்த சிரத்தையுடன் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கராத்தே சங்கத்தில் பண மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

இலங்கை கராத்தே சங்கத்தில் பண மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து கடும் குற்றச்சாட்டு

July 2, 2026
விசாரணையிலிருந்து தப்பிக்க சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரத நாடகம்
செய்திகள்

விசாரணையிலிருந்து தப்பிக்க சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரத நாடகம்

July 2, 2026
இனியபாரதிக்கு ஜூலை 8 வரை விளக்கமறியலில்
செய்திகள்

இனியபாரதிக்கு ஜூலை 8 வரை விளக்கமறியலில்

July 2, 2026
திருக்கோவில் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது
செய்திகள்

திருக்கோவில் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

July 2, 2026
களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!
செய்திகள்

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!

July 2, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

July 2, 2026
Next Post
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.