Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான புதிய முதலீடுகள் தொடர்பில் ஜனாதிபதி நம்பிக்கை!

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான புதிய முதலீடுகள் தொடர்பில் ஜனாதிபதி நம்பிக்கை!

1 year ago
in செய்திகள்

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான குறுகிய கால மூலோபாயமாக சுற்றுலா ஊக்குவிப்பு, விவசாய நவீனமயமாக்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவற்றுக்காக இலங்கை தற்போது புதிய முதலீடுகளை ஈர்க்கும் நம்பிக்கையில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று (17) சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் (WEF) பங்குதாரர்கள் உரையாடலின் ஒரு அங்கமான நிபுணர் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

விளிம்பிலிருந்து பின்வாங்குதல் (‘Pulling back from the brink)என்ற தலைப்பில் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

இலங்கையின் எதிர்கால நோக்கு மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அணுகுமுறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இலங்கை இதுவரை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை கோடிட்டுக் காட்டியதுடன், இந்த ஆண்டு 2% பொருளாதார வளர்ச்சியை இலங்கை எதிர்பார்ப்பதாகவும், அடுத்த வருடம் அதனை 5% ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் படி, அரசாங்க வருவாயை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், வருவாய் சேகரிப்பு உத்திகளில் சீர்திருத்தம் மற்றும் வருவாய் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவன ரீதியான கட்டமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார்.

அதேநேரம் இந்த சந்திப்பில் பாரம்பரிய நிதி விதிகளை கடைபிடிக்கும் போது பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மக்களுக்கு அத்தியாவசிய வசதிகளை வழங்குவதற்கும் கடுமையான நிதிச் சட்ட விதிகளை நிர்வகிப்பதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

வரி அதிகரிப்பு காரணமாக மக்களுக்கு ஏற்படக் கூடிய அதிருப்தி குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, இலங்கை வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பழகிவிட்டதாகவும், அதற்கு நாடு திறந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆபிரிக்க நாடுகள் எதிர்நோக்கும் தனித்துவமான சவால்கள் குறித்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அவர்களுக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கு தனது ஆதரவைத் தெரிவித்ததுடன், அதற்கான கூட்டு முயற்சியின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடையசெய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
Next Post
திருகோணமலையின் சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்க வேண்டாம்; திருமலை மீனவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

திருகோணமலையின் சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்க வேண்டாம்; திருமலை மீனவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.