Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அல்கைதா அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள்; சிவப்பு பிடியாணை வழங்கியது நீதிமன்றம்!

அல்கைதா அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள்; சிவப்பு பிடியாணை வழங்கியது நீதிமன்றம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அல்கைதா அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள் நான்கு பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் இலங்கையைச் சேர்ந்த சிலர் அல்கைதா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தமை குறித்து தகவல்களை திரட்டியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டில், பயங்கரவாதத் தடுப்புப் விசாரணைப் பிரிவு குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

அத்தோடு, கொழும்பு மேல் நீதிமன்றில் பத்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில் மேலும் ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் வழக்குடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர் இலங்கையை விட்டும் வெளியேறி வேறு நாடுகளில் வசிப்பதாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தனர்.

மேலுடம், அவர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை ஒன்றைப் பிறப்பிக்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சந்தேக நபர்கள் முன்னர் கல்எளிய மற்றும் கலகெடிஹேன பிரதேசத்தில் வசித்துள்ளதுடன் தற்போது அவுஸ்திரேலியா மற்றும் சிரியாவில் வசிப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வழக்கின் முதலாம்,. இரண்டாம், ஒன்பதாம் மற்றும் பதினாறாம் சந்தேக நபர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் மற்றும் மேலும் இருவரே இவ்வாறு வெளிநாடுகளில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கைஎனப்படும் சர்வதேச பிடியாணை நேற்று நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க குறித்த நான்கு பேருக்கும் எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்
சிறப்பு கட்டுரைகள்

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்

September 19, 2026
யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது

September 19, 2026
திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!
செய்திகள்

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!

September 19, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

September 19, 2026
Next Post
திடீரென தீப்பற்றி எறிந்த முச்சக்கரவண்டி!

திடீரென தீப்பற்றி எறிந்த முச்சக்கரவண்டி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.