Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களினால் நம் உடலுக்கு ஆபத்து; சுற்றாடல் நீதி நிலையம் எச்சரிக்கை!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களினால் நம் உடலுக்கு ஆபத்து; சுற்றாடல் நீதி நிலையம் எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பரபென் அடங்கிய உணவுகள், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் பாவனையானது உடலின் ஹார்மோன்களைப் பாதித்து புற்றுநோய், கருப்பை பிரச்சினைகள், இனப்பெருக்கக் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்துவதாக சுற்றாடல் நீதி நிலையத்தின் திட்ட முகாமைத்துவ அதிகாரி சலானி ரூபசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரம், கிருமிநாசினிகள், சலவைத்தூள் , நீரை உட்புகவிடாத துணிகள் போன்றவற்றில் உடலின் ஹார்மோன்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் சர்வதேச மாசு ஒழிப்பு வலையமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

கூடுதலாக, சில ரெயின்கோட்டுகள் மற்றும் ஏப்ரன்களில் மனித ஹார்மோன்களின் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இரசாயனங்களால் சிறுநீரக புற்றுநோய், டெஸ்டிகுலர் புற்றுநோய், தைராய்டு நோய், கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம், ரத்தம் மற்றும் தாய்ப்பாலின் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு இந்த இரசாயனங்கள் பரவ வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பாலிபுளோரோஅல்கைல், மீதில்பரபின், பாபில்பரபின், ஐசோபிரைல்பரபின், பியூட்டில்பரபின், ஐபென்டைல்பரபின் போன்ற பல்வேறு இரசாயனங்கள் இந்த ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக பாலிபுளோரோஅல்கைல் பொருட்கள் நீரில் கரையக்கூடியவை, எனவே அவை தண்ணீரின் மூலம் மனிதர்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் உடலுக்குள் நுழைகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

செக் குடியரசில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுத் துறைக்கு ஃபரிக் துணியால் செய்யப்பட்ட ஏப்ரன்கள், ரெயின்கோட்கள் போன்றவற்றின் ஆறு மாதிரிகளை அனுப்பியதில், ஒரு ஏப்ரனில் ஒரு நனோகிராமிற்கு 2.7 கிராம் என்ற இரசாயனம் பஃப்ளூரோடெகானோயிக் அமிலமும், ஒரு ரெயின்கோட்டில் ஒரு நனோகிராமுக்கு 2.6 கிராம் இரசாயனம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் ஆடைகளில் இந்த இரசாயனங்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெத்தில்பாரபின், எத்தில்பரபின், புரோபில்பரபின், ஐசோபிரைல்பரபின், ப்யூட்டில்பரபின், பென்டைல்பரபின், ஃபைனில்பாரபின், பென்சில்பரபின், கை சுத்திகரிப்பு, பற்பசை, பாடி வாஷ், மவுத்வாஷ், கிருமிநாசினி டிஷ்யூ பேப்பர் உட்பட 30 மாதிரிகள் அவற்றில் அடங்கியுள்ளன.

சுற்றாடல் நீதி நிலையத்தின் திட்ட முகாமைத்துவ அதிகாரி சலானி ரூபசிங்க கூறுகையில், பரபென் அடங்கிய உணவுகள், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் பாவனையானது உடலின் ஹார்மோன்களைப் பாதித்து புற்றுநோய், கருப் பிரச்சினைகள், இனப்பெருக்கக் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் நோய்கள்; உணவுப் பழக்கமே முக்கிய காரணம்!
செய்திகள்

இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் நோய்கள்; உணவுப் பழக்கமே முக்கிய காரணம்!

August 13, 2026
நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு; 91,059 பேர் பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு; 91,059 பேர் பாதிப்பு!

August 13, 2026
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!
செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!

August 13, 2026
இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம் குறித்து ஐ.நா. பிரதிநிதி கவலை!
செய்திகள்

இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம் குறித்து ஐ.நா. பிரதிநிதி கவலை!

August 13, 2026
பல மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

August 13, 2026
மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை
செய்திகள்

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை

August 12, 2026
Next Post
புத்தாண்டுக்கு கசிப்பு குடிக்க முடியாது- சாராயத்தின் விலையை குறையுங்கள்; இராஜாங்க அமைச்சர் கோரிக்கை!

புத்தாண்டுக்கு கசிப்பு குடிக்க முடியாது- சாராயத்தின் விலையை குறையுங்கள்; இராஜாங்க அமைச்சர் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.