Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்குடா வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் விசேட நிகழ்வுகள்!

கல்குடா வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் விசேட நிகழ்வுகள்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்குடா வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், ஏர் சஞ்சிகைவெளியீட்டு நிகழ்வும் பாடசாலை மண்டபத்தில் அதிபர் திரு.கி.சிவலிங்கராஜா தலைமையில் நேற்று 02 நடைபெற்றது.

மேற்படி நிகழ்வினை அதிபர், ஆசிரியர் சமூகம், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசையுடன் ஊர்வலமாக பாடசாலை வளாகத்தினுள் அழைத்து வரப்பட்டதுடன், தேசிய கொடி,பாடசாலை கொடியேற்றலுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

மங்கள விளக்கேற்றலுடன் இந்து,கிறிஸ்த்தவ இறை வழிபாட்டுடன் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன.மாணவர்களின் நடனம்,குழுப்பாடல் என்பன காண்போரை கவர்ந்தன.சிறப்பு விருத்தினர்கள் உரையாற்றினார்கள்.பிரதேசத்தின் மண் வாசனை கமலும் கலாச்சார பண்பாட்டு,விழுமியங்களை பிரதி பலித்துக் காட்டும் வகையில் ஆசிரியர்கள், மாணவருடைய ஆங்கங்கள் கொண்டதான ‘ஏர்’ சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன் ஆய்வுரையினை ஒய்வு நிலைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன் தொகுத்து வழங்கினார்.
விளையாட்டு, கலை, பண்பாட்டு, மாணவர்களின் பாட அடைவு, பல்கலைக் கழகத் தெரிவு போன்றவற்றில் ஆர்வம் செலுத்தி சித்தி பெற்ற மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.

இதேபோன்று பொறியியல், விஞ்ஞானம், கலை, வர்த்தக பிரிவுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விஷ்ணு விருது வழங்கி பாராட்டப்பட்டனர். அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டிருந்ததுடன், சிறப்பு அதிதியாக கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி, விசேட அதிதிகளாக கிழக்கு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ப.இளங்கோ,வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர்களும் அழைப்பு அதிதிகளாக குறித்த பாடசாலையில் சேவையாற்றிச் சென்ற ஓய்வு நிலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
செய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

June 15, 2025
நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு
செய்திகள்

நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு

June 15, 2025
மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி
செய்திகள்

மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி

June 15, 2025
இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்
சினிமா

இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்

June 15, 2025
மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
செய்திகள்

மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

June 15, 2025
வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்
செய்திகள்

வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்

June 15, 2025
Next Post
பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் ஸ்பா முகாமையாளர்கள் கைது!

பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் ஸ்பா முகாமையாளர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.