Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆபாச படம் வைத்திருந்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாதத் தடைச் சட்டம்; இலங்கையில் இப்படியும் சம்பவம்!

ஆபாச படம் வைத்திருந்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாதத் தடைச் சட்டம்; இலங்கையில் இப்படியும் சம்பவம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தனது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசியில் பாலியல் வீடியோக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடரப்பட்ட வழக்கில் சந்தேக நபரான 35 வயதுடைய திருமணமான ஒருவரை விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று (15) உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கூறப்பட்ட பாலியல் காட்சிகளை யாருக்கும் விநியோகிக்கவில்லை, ஆபாசமான பாலியல் காட்சிகளை வைத்திருந்தமை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எவ்வாறு குற்றமாக கருதப்படுகின்றது என சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தீஷ்ய வேரகொடவின் சமர்ப்பணங்களை பரிசீலித்த மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அமைச்சர் ஒருவர் மற்றும் மற்றுமொரு நபர் தொடர்பில் இணையத்தில் வெளியிட்ட குறிப்பின் அடிப்படையில் தனது கட்சிக்காரரை கைது செய்தமை தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி தீஷ்ய வேரகொட நீதிமன்றில் தெரிவித்தார்.

மேலும், புகார்தாரரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் பிற ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டத்தின் பிரகாரம் பாலியல் வீடியோக்களை வைத்திருப்பது குற்றமல்ல எனவும், அவற்றை இணையத்தளத்திலோ அல்லது வேறு வழிகளிலோ எவருக்கும் விநியோகிக்கவில்லை எனவும் சட்டத்தரணி தீஷ்ய வேரகொட நீதிமன்றில் சுட்டிக்காட்டினார். விசாரணை அதிகாரிகள் தனது கட்சிக்காரரின் கைத்தொலைபேசியை கைப்பற்றி அவர்களுக்கிடையில் பாலியல் வீடியோக்களை பகிர்ந்து மகிழ்ந்ததாக நீதிமன்றில் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி தீஷ்ய வேரகொட, குற்றச்சாட்டை தனது கட்சிக்காரர் மீது சுமத்த முடியாது என நீதிமன்றில் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
கோட்டாவை கொல்ல சிங்களவர்கள் வரவில்லை- முஸ்லிம்கள் தான் வந்தார்கள்; சுகேஸ்வர பண்டார குற்றச்சாட்டு!

கோட்டாவை கொல்ல சிங்களவர்கள் வரவில்லை- முஸ்லிம்கள் தான் வந்தார்கள்; சுகேஸ்வர பண்டார குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.