Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இனி 4 மாடிகளுக்கு மேல் நிர்மாணிக்க முடியாது!

இனி 4 மாடிகளுக்கு மேல் நிர்மாணிக்க முடியாது!

2 years ago
in செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிதை அடுத்து, நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு திங்கட்கிழமை (01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கே ஜனாதிபதி யோசனைகளை முன்வைத்திருந்த நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரில் பாரிய கட்டடங்களை நிர்மாணிக்காமல் சுற்றுலாப் பயணிகள் ஓய்வு நேரத்தைக் கழிக்கும் வகையில் இலகுவான சூழலுடன் திட்டங்களைத் தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துடன் கலந்தாலோசித்து புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய
மாகாண ஆளுநரின் தலைமையில் சம்பந்தப்பட்ட பங்குதாரர் நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட பணிக்குழுவை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் முன்மொழியப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையானது 38/16/01-06-1978 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நுவரெலியா மாநகர சபைப் பகுதியைநகரப் பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன், நுவரெலியா பிரதேச சபைப் பகுதியும் நகரப் பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் இல. 154614/01-09-1998 மூலம் அறிவிக்கப்பட்டது. நுவரெலியா மாவட்டம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இப்பகுதியில் நடக்கும் முறைசாரா வளர்ச்சி, குறைந்த வசதிகள் கொண்ட குடியிருப்புகள், தரமற்ற குடிநீர், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது நிர்மானிக்க முடியாது.

தொடர்புடையசெய்திகள்

தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
செய்திகள்

தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

May 19, 2025
சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களில் 685 பேர் பாதிப்பு
செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களில் 685 பேர் பாதிப்பு

May 19, 2025
195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு 2 வயது குழந்தை
செய்திகள்

195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு 2 வயது குழந்தை

May 19, 2025
ஓட்டமாவடி மத்திய கல்லூரி உயர்தர மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
செய்திகள்

ஓட்டமாவடி மத்திய கல்லூரி உயர்தர மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

May 19, 2025
”முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி” – உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்திய சிங்கள இளைஞன்
செய்திகள்

”முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி” – உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்திய சிங்கள இளைஞன்

May 19, 2025
பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் கிழக்கு தேற்றாத்தீவு பிரதேசத்தை சேர்ந்த கடற்கொள்ளையரை படம்போட்டு காட்டிய மீனவர்கள்
செய்திகள்

பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் கிழக்கு தேற்றாத்தீவு பிரதேசத்தை சேர்ந்த கடற்கொள்ளையரை படம்போட்டு காட்டிய மீனவர்கள்

May 19, 2025
Next Post
விஞ்ஞான வினா-விடைப்போட்டியில் மட்/ மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்!

விஞ்ஞான வினா-விடைப்போட்டியில் மட்/ மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.