மட்டக்களப்பில் விடாது தொடரும் கனமழையினால் தாழ் நிலங்களில் வசிக்கும் மக்களின் நாளாந்த செயற்பாடு தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (20) தொடக்கம் ஆங்காங்கே சாதாரணமாக ஆரம்பமான இந்த மழை இன்று (22) காலை முதல் இடைவிடாது பெய்ய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் அன்றாட கூலித்தொழிக்கு செல்பவர்களின் நாளாந்த செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கையில்,
கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.
பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.